மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!
Friday, August 5th, 2022
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதாரப் பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
உடுவில் பிரதேச பொது அமைப்புகளுக்கு ஈ.பி.டி.பியால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!
தேசிய தரப்படுத்தலில் முதலிடம் பிடித்த யாழ். மாவட்ட செயலகம் - 14 பிரதேச செயலகங்களுக்கும் சிறப்ப விருத...
சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானம்!
|
|
|


