மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கம்!
Wednesday, February 21st, 2018
மீன்பிடித்துறையில் 2020ஆம் ஆண்டளவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் எட்டாயிரத்து 562 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சின் தேசிய நீரியல் உயிரினவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டளவில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்யப்படும் என்றும்அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஒரே மாதத்தில் இந்திய-சீன தலைவர்கள் மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு!
புதிய அரசமைப்பின் பின்னரே மாகாணசபைத் தேர்தல் - அமைச்சர் சரத்வீரசேகர!
அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு - 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ...
|
|