மக்களின் மனதை வென்றெ இராணுவ அதிகாரி – பிரியாவிடை நிகழ்வில் கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்!

Monday, June 11th, 2018

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு விசவமடு பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ள சம்வமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில், சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

பாதுகாப்பு படைகளில் வடக்கில் உள்ள மக்களை உண்மையில் நேசிக்கும் அதிகாரிகள் இருப்பதுடன், அவர்களை நேசிக்கும் மக்களும் இருக்கின்றனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தம்புள்ளையை சேர்ந்த நபரொருவர் எனக்கு இந்த புகைப்படங்களை அனுப்பியிருந்தார் என தெரிவித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/Keerthi.tennakoon/posts/10214508375076669

 

Related posts: