மக்களால் தூக்கி எறியப்படும் அச்சம்: சிதறுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

Monday, November 6th, 2017

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 4 கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். தனியே போக முடிவு செய்ததை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் நடக்க இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எஞ்சிய மூன்று கட்சிகளும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட முடிவு செய்துள்ளன.

புலிகளால் 16 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைய ஆரம்பித்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.இந்த நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி கலந்துகொண்டிருக்கவில்லை.இதையடுத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று கட்சிகளாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி உருவாக்கப்பட்டது.அப்போது தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன கூட்டமைப்பில் இணைந்திருந்தன.இடையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேற அந்த இடத்திற்கு புளொட் அமைப்பு இணைந்தது, இந்த நிலையில் இப்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் பிரிந்துள்ளது..

இந்நிலையில் மக்களை ஏமாற்றி அரசியல் சுகம் கண்டுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் தற்போது புறக்கணித்துவரும் நிலையில் அந்தக் கூட்டமைப்பின் பங்காளிகளும் அதிலிருந்து கழன்று செல்லும் நிலை உருவாகியுள்ளது.

Related posts:

பத்திரிகை பேரவை சட்டத்தை சகல ஊடகங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் ஊடகக் பேரவை சட்டமாக மறுசீரமைப்பது தொட...
4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள் இலங்கையில் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை - வலு...