புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
Monday, April 23rd, 2018இலங்கையில் மக்களின் நன்மை கருதி 6 பேர் பயணிக்க கூடிய முச்சக்கரவண்டி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிலுள்ள முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 4 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்.
இந்நிலையில் 6 பேர் பயணிக்கக் கூடிய புதிய முச்சக்கர வண்டி ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது. இதில் சாரதி மற்றும் 5 பேர் பயணிக்க முடியும்.
நாட்டின் சட்டத்திற்கமைய ஒரு முச்சக்கர வண்டியில் 3 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும். எனினும் இந்த தயாரிப்பு மூலம் அதிக வசதிகளுடன் இலகுவாக பயணம் மேற்கொள்ள முடியும்.
இருப்பினும் இவ்வாறான முச்சக்கரவண்டிகள் ஆசிய நாடுகளில் மாத்திரம் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
Related posts:
உருளைக்கிழங்கு, சோளத்திற்கான விலை அதிகரிப்பு!
போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!
தாமரை கோபுரத்தின் முதல் 3 நாள் வருமானம் 75 இலட்சம் ரூபாவாக பதிவு - தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்த...
|
|