வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு தெரிவிப்பு!

Saturday, July 10th, 2021

வெளிநாடுகள் தொழில்புரிந்த இலங்கையர்கள் 124 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் 16 நாடுகளில் தொழில்புரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்படும் மரண சடங்குகளுக்காக தலா 40 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: