பாதுகாப்பு குறித்து ஈரானுடன் இலங்கை  முக்கிய பேச்சு!

Friday, April 28th, 2017

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹெசெய்ன் டெய்கன் (Hossein Dehghan) மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமாரவுக்கும் இடையில் பாதுகாப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ரஸ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மாநாட்டின் பக்க அமர்வாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் இதன்போது ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஸ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்ப மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளும் பங்கேற்றுள்ளன. சர்வதேச பயங்கரவாதம் காரணமாக உலகில் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: