பதவி வழங்கினால் கட்சியில் இருந்து விலகுவேன்!
Friday, May 5th, 2017சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டால் கட்சியில் இருந்து தான் விலகப் போவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை கூட பெறாத பொன்சேகாவுக்கு பதிலாக தேசிய பட்டியலில் ரோசி சேனாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் 8ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடவுள்ளதுடன், இதன் போது சில பதவிகளுக்கான புதிய நியமனங்கள் செய்யப்படவுள்ளன.
Related posts:
சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!
சமூகத்தில் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் - சுகாதார சேவைகள் பிரதி பணிப்ப...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர...
|
|