நீதிமன்றில் ஆஜராகுமாறு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவுக்கு உத்தரவு!

Thursday, May 4th, 2017

இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது ஐ.தே.க. பிரசார கடமையில் ஈடுபட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினரை பதுளையில் வைத்து தாக்கியமை குறித்த முறைப்பாட்டினையடுத்தே அமைச்சரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் செப்டெம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ம...
பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன - அமைச்...
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்...