நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை – ஆளுநர் றெஜினோல்ட் குரே!
Friday, November 30th, 2018வடமாகாண மகளிர்விவகார அமைச்சினால் முறைகேடாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படும் ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.
இந்தக் குழுவில் வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார்.
Related posts:
தெருநாய்கள் பிடித்தல் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை!
3,360 மணித்தியாலங்கள் ஏமாற்றப்பட்டுள்ளேன் - கீர்த்தி தென்னக்கோன் அதிருப்தி!
நாடாளுமன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் 11 பேரடங்கிய குழு நியமனம்!
|
|