நாடளாவிய ரீதியில் நீர்வழங்கள் வடிகாலமைப்பு வேலை நிறுத்தத்திற்கு தயார்!

Sunday, January 28th, 2018

நாடளாவிய ரீதியில் பெப்ரவரி முதல் வாரத்திலிருந்து வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின்ஒன்றிணைந்த கூட்டமைப்பானது அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறித்தகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பள நடைமுறையை நடைமுறைப்படுத்த மேலும் தாமதம் ஏற்படுத்தினால் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வேலைநிறுத்தத்தினைமுன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மேல் மாகாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி நான்கு மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக உபாலி ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

Related posts: