நடவடிக்கைக் குழுவின் அறிக்கை விவாதத்தின் பின்னர் மக்களின் கருத்துக்கள்!
Sunday, October 29th, 2017
அரசியல் யாப்பு நடவடிக்கைக் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கிறது.குறித்த விவாதத்தின் பின்னர் நாட்டு மக்களின் அபிப்பிராயமும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவிருக்கிறது.
குழுவின் இடைக்கால அறிக்கை சம்பிரதாய அடிப்படையில் அரசியல் யாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்;. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, மஹாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகிய தரப்புக்களின் கருத்துக்களும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்;.
Related posts:
யாழ்ப்பாணத்திற்கான புகையிரதம் மட்டுப்படுத்தப்பட்டது - கட்டுப்பாட்டு அறை!
அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடனைப்பெற்றுக்கொள்ளவும் - மத்திய வங்கி !
ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச - எதி...
|
|