தேர்தல் பிற்போட்டால் சட்ட நடவடிக்கை: பவ்ரல்

Tuesday, August 8th, 2017

மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்குத் தீர்மானிக்கட்டுள்ள நிலையில் பதவிக்காலம் நிறைவடைகின்ற மாகாண சபைகளின் தேர்தல்கள் பிற்போடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று கபே அமைப்பும் கூறியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: