தேர்தல் பிரசார கூட்டத்திற்கான புதிய சட்ட விதிகள்!

Saturday, January 20th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நடாத்தப்படும் பிரசார கூட்டத்திற்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுதலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர்கள் பங்கு கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 400 மீற்றர் உட்ப்பட்ட பகுதியை அலங்கரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறும் பகுதிக்குள் தோறணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் மாத்திரமே இடம் பெறவேண்டும். நீண்டகாலத்திற்கு கட்டவுட் காட்சிப்படுத்துவதுதடைசெய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்கும் தேர்தலுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் தேர்தல் சட்டம் மீறப்படுவது தொடர்பான தகவல்கள் இருக்குமாயின்அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டு கொண்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற ரேர்தலை இலக்காக கொண்டு இந்த காலப்பகுதியில் சட்ட விரோதமாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் மீதும் அரசாங்கத்தின் செலவில்விநியோகிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்தவற்றை ஒட்டுவதற்கான அறிவிப்பு தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் விதி முறைகளை எவரேனும் மீறும் குற்றச்சாட்டு இருக்குமாயின் அவற்றை சமூக இணையத்தளங்களில் வெளியிடுவது அல்லபொலிஸாருக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

Related posts: