தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டிடம் கொழும்பில்!
Thursday, June 7th, 2018
சீன நிறுவனம் ஒன்று தெற்காசியாவில் மிக உயரமான கட்டிடத்தை கொழும்பில் அமைக்கவுள்ளது.
376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக அமையும் இந்தக் கட்டிடப் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்டதாக இந்தக் கட்டிடம் கட்டப்படவுள்ளது.
THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், உலங்குவானூர்தி இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.
Related posts:
வடக்கின் கல்வித்தரம் வீழ்ச்சிக்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற ஆட்சியாளர்களே காரணம் – வடக்கு மாகாண...
வடக்கில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - பேருந்து கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் நாளை!
ஜனவரிமுதல் இதுவரையில் ஒரு இலட்சத்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !
|
|
|


