ஜனவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்!

Friday, December 22nd, 2017

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் முதலாவது கட்டப் பணிகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல்  13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் 57 பாடசாலைகள் இதற்காக முழுமையாக மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: