தன்சானியாவில் சீரற்ற காலநிலை – வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழப்பு!
Friday, April 26th, 2024
கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் அங்கு பெய்து வரும் மழை காரணமாக 51 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு தன்சானிய பிரதமர், அந்த நாட்டு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழகம் புதுச்சேரியில் மே 16இல் தேர்தல்
எதிர்வரும் மாதம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு- அமைச்சர் மஹிந்த அமரவீர!
இலங்கை வரும் சீன கப்பல் - பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் இடம்பெறுவதாக இந்தியா அறிவிப்...
|
|
|


