சைட்டம் விவகாரம்: மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் மூவர் விலகல்!
Wednesday, November 15th, 2017
சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை பதிவு செய்து கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை முன்வைத்த மேன்முறையீட்டை விசாரித்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமிலிருந்து விலகுவதாக நீதிபதி பிரியந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய குழு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அளவில் தமது பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதனையடுத்து குறித்த பிரேரணையை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!
நாட்டின் வளிமண்டலத்தில் தூசுத் துகள்களின் செறிவு அதிகரிப்பு - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக...
சிகரெட் மற்றும் மதுபான பாவனையால் தினமும் 100 பேர் அகால மரணம் !
|
|
|
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...
நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அனுமதியை பெற்றது இலங்கை - சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றி த...


