அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் – மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022

கடந்த வருடம் அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 1.5 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் வசமுள்ள மரத்தளபாடங்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவது குறித்தும் இந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: