சேவைக்கு திரும்பாதவர்களுக்கு பதிலாக புதியவர்கள்-  பிரதி போக்குவரத்து அமைச்சர்!

Monday, December 11th, 2017

தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நாளைய தினம் சேவைக்கு சமுகமளிக்காதவர்களின் இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொடருந்து பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது. கடந்த ஆறாம் திகதி தொடருந்து பணியாளர்களால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படாதவரை போராட்டம் தொடரும் என தொடருந்து பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: