சர்வதேச ரீதியில் இலங்கைப் பொலிஸார் முன்னணியில்!

Wednesday, May 9th, 2018

நாட்டில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 95 வீதமான சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன்குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 75 வீதமான சந்தேகநபர்களையும் அடையாளம் காண பொலிஸாருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகளவு முன்னணியில் இருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகரதெரிவித்துள்ளார்.

Related posts: