சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தேர்தல்கள் திணைக்களம் தயார் நிலையில் – மகிந்த
Sunday, August 20th, 2017சர்வஜன வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானித்தால் அதை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருக்கின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்கெடுப்பை நடத்த அனுமதி வழங்கப்பட்டால் 6 வாரங்களுக்குள் வாக்கெடுப்பை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். அரசமைப்பு திருத்தம் மற்றும் அது தொடர்பான விடயங்களை தவிர வாக்கெடுப்பு தொடர்பில் சுயமான முடிவை எடுக்கும் அதிகாரம் அரச தலைவருக்கு இருக்கின்றது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவதற்கு இணக்கம்!
O/L மேலதிக வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகள் நடத்த தடை- பரீட்சைகள் ஆணையாளர் !
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல் - ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பினர்களை அ...
|
|