அரசாங்கத்தின் சில உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல்!
Tuesday, May 18th, 2021
இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவை மீள சீர்ப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த இந்த இணையவழி முடக்கம் இடம்பெற்றதாக விமானப்படையின் இணையப் பாதுகாப்பு பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு தகவல் வழங்கியதாக விமானப்படை பேச்சாளர் துசான் விஜேதிலக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபாயம் மிக்க 6 மாவட்டங்களை தவிர்து ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!
புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை கைவிட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!
கடலுக்கு சென்ற இருவர் கரை திரும்பவில்லை - கண்ணீரால் சோகமயமானது அனலைதீவு!
|
|
|


