அரசாங்கத்தின் சில உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல்!
Tuesday, May 18th, 2021இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவை மீள சீர்ப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த இந்த இணையவழி முடக்கம் இடம்பெற்றதாக விமானப்படையின் இணையப் பாதுகாப்பு பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு தகவல் வழங்கியதாக விமானப்படை பேச்சாளர் துசான் விஜேதிலக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிலரது சுய நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல - அன்டனி ஜெயநாதன்
தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமைஅமையாமையேகாரணமாகும் அனைத்துத் தமிழ்க்...
இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
|
|