சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் பக்க சார்ப்பானது – GMOA!

Sunday, August 27th, 2017

சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்பட்டுள்ளதாக அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது.

சைட்டம், பிரச்சினை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஏற்கனவே பல தடவைகள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை எனவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சைட்டம் நெருக்கடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று(25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே மேற்குறித்த இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Related posts: