க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு 6 பாடங்கள்!
Sunday, June 17th, 2018கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் மாணவர்கள் கற்கும் பாடங்களை 6ஆகக் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் தேசிய கல்வி நிறுவனத்தினூடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் தொழில் ரீதியான கற்கை நெறிகளுக்காக 26 பாடங்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளைஇசாதாரண தரப் பரீட்சைகளில் சித்தியடையாவிட்டாலும் குறித்த தொழிற்சார் கல்வி பாடங்கள் மூலம் மாணவர்கள் உயர் தரத்திற்கு செல்ல முடியும் எனவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
விசாவுக்கு அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தம்!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமர் மஹிந்தவிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!
பௌத்த மத சிந்தனைக்கு ஏற்ப முடிவுகளை இந்த நாட்டின் தலைவர்கள் எடுக்க வேண்டும் - பேராயர் மால்கம் ரஞ்சித...
|
|