க.பொ.த சாதாரண தரம் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்
Wednesday, January 24th, 2018
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி இன்று 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இவ்விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட மதிப்பீட்டு நிலையங்களில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கான கடிதங்கள் உரிய ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தமிழ் இலக்கிய நயம், இரண்டாம் மொழி தமிழ், இரண்டாம் மொழி சிங்களம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகளே நடைபெறவுள்ளன.
Related posts:
தொடர்ந்தும் நாளாந்தம் 3 ஆயிரத்தை தாண்டும் தொற்றாளர்கள் - கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பே அவச...
இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
50,000 விவாகரத்து வழக்குகள் விசாரணை - இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக...
|
|
|


