கொரோனா தொற்று: இந்தியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது!

Friday, April 10th, 2020

 இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. குறித்த தகவலின்படி இதுவரை இந்தியாவில் 6,725 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: