காபூலில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 80 பேர் பலி!
Wednesday, May 31st, 2017ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வேன் - கோத்தாபய ராஜபக்ச!
பொன்.சிவகுமாரனின் 48 ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிப்பு!
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்ப...
|
|