காணாமற்போன மீனவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்!
Monday, December 18th, 2017மன்னார் பேசாலையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போயிருந்த இரு மீனவர்களில் ஒருவர், இராமேஸ்வரம் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
காணாமற்போயுள்ள மற்றைய மீனவர் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னார் – பேசாலையிலிருந்து நேற்று (16) அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
4 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய அந்தோனி மரியதாஸ் மற்றும் 25 வயதான சம்சன் அன்டன் ஆகியோரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர். இந்த மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்த ஒருவர் இராமேஷ்வரம் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.
மீனவர்கள் காணாமற்போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், சம்பவம் குறித்து கடற்படையினருக்கும் அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
|
|