கடற்றொழிலாளர் பற்றிய தொகை மதிப்பீடு!

Tuesday, March 20th, 2018

2018 ஆம் ஆண்டில் கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு  மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான ஆலோசனையை கடற்றொழில் திணைக்களத்தின்  அதிகாரிகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இலங்கையில் 1976 ஆம் ஆண்டு முதல் தடவையாக மீனவர்கள் தொடர்பான தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் 42 வருடங்களாக தொகை மதிப்புமேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சரியான தரவுகளை சேகரிக்க தொகை மதிப்பை மேற்கொள்வது அவசியமாகும் என்றும் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரம் குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம்போன்றவற்றை அறிந்து கொள்ள இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: