இலங்கையில் இன்று துக்கதினம்!
Wednesday, May 2nd, 2018பிரபல சிங்கள திரைப்பட இயக்குநரான பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரிகை அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிற்பகல் 4மணிக்கு இடம்பெற உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெற உள்ளன.இந்த நிலையில், இன்று துக்கதினம் பிரகடன்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இயக்குநர் பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தமது 99 ஆவது வயதில் கடந்த 29ஆம் திகதி அவர் காலமானார்.
அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை கிறிஸ்தவ கிரிகை முறைமைகள் இடம்பெற்றதன் பின்னர், முற்பகல் 10 மணிக்கு பூதவுடல் சுதந்திர சதுக்கத்துக்கு வாகன பேரணி ஊடாக எடுத்துச் செல்லப்பட உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|