இலங்கைத் தேயிலைக்கு ரஷ்யாவில் தடை!  

Saturday, December 16th, 2017

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா தற்காலிகமாக தடை செய்யவுள்ளதாக அந்த நாட்டின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் சிறு வண்டுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து டிசம்பர் 18ம் திகதி முதல் இலங்கையில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யா தற்காலிகமாக தடை விதிக்கிறது.இலங்கையில் இருந்து ரஷ்யா 23 சதவீதமான தேயிலையை இறக்குமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: