இரு அதிகாரிகளுக்கு எதிராக பிரதமரிடம் முறைப்பாடு!

Sunday, August 13th, 2017

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இரு அதிகாரிகளுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில், கடயைமாற்றி வரும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றின் ஊடாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்னதின் இரண்டு உயர் அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts: