வடக்கில் வகுப்பறைகள் சிறிதாகவும் – ஓய்வறைகள் பெரிதாக உள்ளன – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்டு!
Friday, July 14th, 2023வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் வகுப்பறைகள் சிறிதாகவும் ஆசிரியர்களின் ஓய்வறைகள் பெரிதாகவும் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் உபசெயலாளர் ஹொல்வின் குலசேகரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆசிரியர் இடமாற்றங்களில் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆசிரியர் இடமாற்றம் உரிய முறையில் இடம்பெற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த வர்த்தமானி வெளியாகும் தினம் அறிவிப்பு!
யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!
பழைய சட்டங்களுக்கு மாற்றாக 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்கள் - இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் ம...
|
|