2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10 ஆயிரத்து 077 தொடருந்து சேவைகள் இரத்து – தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தகவல்!

Sunday, October 22nd, 2023

2022ஆம் ஆண்டில் மாத்திரம் 10,077 தொடருந்து சேவைகள்  இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டு ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 993 தொடருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில், 32 ஆயிரத்து 844 தொடருந்துகள் மாத்திரமே உரிய நேரத்தில் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் 88 ஆயிரத்து 149 தொடருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை எனவும் தேசிய கணக்காய்வாளர் அலுவலகம்; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை - ஜனாதிபதி!
கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் - நாட்டு மக்களிடம...
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங...