கொழும்பு – தூத்துக்குடி  இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை  !

Monday, February 26th, 2018

கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இடையில் சரக்கு மற்றும் பயணிகளுக்கான கப்பல் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் Ceylon Shipping Corporation Ltd சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணக்கப்பாட்டு குழு இதற்கான கேள்வி மனுவை கோரியுள்ளது.

இலங்கைக்கான தேசிய கடல் பயணங்களுக்கான நிறுவனமாக Ceylon Shipping Corporation Ltd நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் இந்த கப்பல் சேவையை கொண்டு நடாத்தவுள்ளது.

இந்த கப்பல் சேவை ஆரம்பத்தில் ஒரு வருட காலத்திற்கு உட்பட்டதாக இருக்கும் பின்னர் இது நீடிக்கப்படும்.

2011 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அடிப்படையில் இந்த சேவையை கொண்ட நடத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: