அடுத்த வாரம் நாடாளுமன்றம் வரும் உள்ளூராட்சிமன்ற சட்ட மூலம் !

Tuesday, August 15th, 2017

உள்ளுராட்சி சட்ட மூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதேச சபைத் தேர்தல்கள் டிசம்பர் அல்லது ஜனவரியில் இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதனிடையே அரசாங்கத்தில் இருந்து 12, 13 பேர் விலகுவது குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் வழங்கிய அவர், 7 அல்லது 8 பேரே செல்வர் என்று தாம் கருதுவதாகவும், எனினும் அது அரசாங்கத்தை பாதிக்காது எனவும் குறிப்பிட்டார்

Related posts:


தேசிய கொடியை ஏற்ற மறுத்தது அரசியலமைப்புக்கு முரணானது - சர்வேஸ்வரன் செயல்குறித்து மனித உரிமைகள் ஆணைக்...
எதிர்வரும் புதனன்று பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் ஆராய்வு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் - அமைச்சர் ...