அடுத்த மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு!

Monday, January 29th, 2018

பிணைமுறி மற்றும் நிதி மோசடிகளை கண்டறிவதற்கான ஆணைக்குழுக்களின் இரண்டு அறிக்கைகள் தொடர்பான விவாதத்திற்காக அடுத்த மாதம் 8ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதனால், விவாதத்தை அன்றைய தினம் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர்  குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதி நிறைவு பெறும். இதற்கமைய, அடுத்த மாதம் 8ம் திகதி பாராளுமன்ற அமர்வை நடத்துமாறும் இதற்கான கடிதங்களை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்குமாறும் தாம் சபாநாயகருக்கு அறிவித்ததாக பிரதமர்  தெரிவித்தார்.

Related posts: