தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018

தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளை ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியான சபைகளாக செயற்படுத்திக் காட்டுவதுடன் நாம் உள்ளூராட்சி தேர்தல் கால விஞ்ஞாபனத்தில் கூறியவற்றையும் முடியுமானவகையில் நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உள்ளூராடசி சபை தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருந்தன.

அந்தவகையில்தான் நாமும் மூன்று முக்கிய விடயங்களை முன்னிறுத்தியதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை “மக்களின் அன்றாட பிரச்சினைக்கான தீர்வு” அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு” போன்ற விடயங்களை முன்னிறுத்தி எமது விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தேர்தல் முடிவுற்று சபைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நாம் எதிர்பார்த்த வெற்றி எமக்கு கிடைக்காதுவிடத்தும் எமது அனுபவங்களினூடாக  எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப நிச்சயம் அதை செயற்படுத்தி காட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

Related posts:

எமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்று தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.க்கு வடக்கு இ.போ.ச ஊழியர்கள் மகஜர்!
பாகிஸ்தான் தூதுவர் தொடர்பில் விந்தன் கனகரத்தினம் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது – தவிசாளர...
வவுனியாவில் மக்கள் அச்ச நிலையில் வாழ பொலிஸாரே காரணம் - மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்...

இறக்குமதி வேட்பாளர்களைக் கொண்டு கூட்டமைப்பு இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது - கட்சியின் கிளிநொச...
யாழ் மாநகரின் உள்ளக வீதிகளில் காணப்படும் வாய்க்கால்களை சீரமைத்து நகரின் சுகாதாரம் உறுதிப்படுத்தப்பட ...
மைத்திரியின் யுகத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது – ஈ.பிடி.பியின் ஊடகப...