சாந்தன் விரைவில் இலங்கை வருவார் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 3rd, 2024


……………
சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது….! EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு  விடுவிக்கப்பட்ட  சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார் என்றும் இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள
சாந்தன் என்று அழைக்கப்படுகின்ற தில்லையம்பலம் சுதேந்திரராசா   இலங்கை வருவது தொடர்பாக. ஊடகங்களிலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

உண்மையில் அவர்  இலங்கைக்கு  வருவதற்க்கு அவரது பெற்றோர்  எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவாந்தாவிடம்  அணுகி தமது மகனை இலங்கைக்கு அழைத்து வருவதில் உள்ள தடைகள், பாதுகாப்பு தரப்பினது அனுமதிகளை பெற்றுத்தருமாறு கோரியிருந்திருக்கிறார்கள்.

உண்மையில்  அமைச்சர் அவர்கள்  தேசிய நல்லிணக்கத்தை தென்னிலங்கை தரப்புக்களுடன் வளர்த்தன அல்லது நட்பை வளர்த்ததன் ஊடாக   நாங்கள் சாத்தியப்படுத்தக் கூடியதான சமிக்கைகள் தெரிகின்றன.

சாந்தனுடைய தாயார் 77 வயதுடைய தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார் தன்னுடைய மகனை தன்னுடைய முதுமை காரணமாக இந்தியாவிற்க்கு சென்று பார்க்க முடியாதுள்ளதாகவும் ஆகவே மனிதாபிமான அடிப்படையில்  தனது மகனை இலங்கைக்கு அழைத்துவர தாங்களாலான உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த வகையில் தென்னிலங்கையில் அரசுடன் அமைச்சர் அவர்கள் தொடர்பு கொண்டதன் ஊடாக அவருடைய வருகை விரைவு படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன்  தேசிய நல்லிணக்கம் தான் இவ்வாறான வாய்ப்புக்களை சந்தர்ப்பங்களை உருவாக்கி தந்திருக்கிறது.

ஆகவே கடந்த நல்லாட்சி அரசு காலத்திலே பல தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் கைதிகளாக சிறைகளிலே நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட. நல்லாட்சி அரசை கொண்டுவந்தவர்கள் கூட நல்லாட்சி அரசினுடைய காவலர்களாக செயற்பட்டவர்களும் அவர்களை விடுவிப்பதிலே அல்லது அவர்களது வழக்குகளை இரத்து செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் அவர்களது பெற்றோர்களுடன் இணைப்பதிலே எவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பது உலகறியும்.

ஆனால் நாங்கள் தென்னிலங்கையுடன் இருக்கின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக றாஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கிலே குற்றவாளியாக தண்டனை பெற்து விடுதலை செய்யப்பட்ட நிலையில்  அவரது தாயார்  வடமராட்சி பகுதியிலே வசித்து வருகின்றார்.

அதனடிப்படையில் அவருடன் இணைப்பதற்க்கான சகல விதமான செயற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.

ஆகவே காகித அறிக்கை விடுபவர்கள் அல்லது தேசிய நல்லிணக்கத்திற்க்கு அப்பாற்பட்டு செயற்படுபவர்கள் அல்லது அரசியல் பலங்களை பிரயோகிக்க முடியாதவர்கள், இவ்வாறு நல்லாட்சி அரசு காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது நன்கு தெரியும்.

ஆகவே ராஜீ்வ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சட்டப்பதத்டிருந்தாலும் மனிதாபிமான அடிப்படையிலே எங்களுடைய அமைச்சர் அவர்கள் அந்த முயற்சியை எடுத்து அவர் தனது தாயருடன் மிக விரைவில் வந்து சேர்வார் என்பதை நாங்கள் இந்த இடத்திலே தெரிவித்து கொள்கின்றோம்

Related posts: