புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறை – குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, April 17th, 2024

புதிய வீசா முறைமை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாக அறவிடப்படவுள்ளது.

அதேவேளை இரண்டு வருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 300 அமெரிக்க டொலர்களாகவும்,10 வருடங்களுக்கான நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 1000 அமெரிக்க டொலர்களாகவும் அறவிடப்படவுள்ளது.

மேலும் இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும்  குடியகல்வுத்  திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
மக்களின் திசைதிருப்ப சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சா...