கிழக்கு மண்ணிலும் முழுமூச்சுடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!
Sunday, May 28th, 2017மக்கள் யுத்தத்தின் பின் சிறப்பானதொரு வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எமது விருப்பமாகும். வடபகுதியில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலப்பணிகள் மிகவும் சிறப்புடனே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் கிழக்கு மண்ணிலும் முழுமூச்சுடன் எமது அரசியல், சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் அவா கொண்டவர்களாக எமது தலைமையும் நாமும் இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துதள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் -கிழக்கு பகுதியில் வாழும் எமது மக்களாகிய உங்களது நலத்திட்டமான வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தற்போது நாம் முற்பட்டுள்ளளோம்.. இதையொரு ஆரம்பமாகக் கொண்டு தொடர்ந்தும் இம்மண்ணில் எமது பணிகளை முன்னெடுப்பதே எமது கனவாக இருக்கின்றது. கண்டிப்பாக இதனைச் செய்வோம் என்ற நம்பிக்கையை உங்களுக்குத் தருவதாகத் தெரிவித்தார்.
Related posts:
|
|