அதிகாரிகள் மோசடி – சோமாலியாவுக்கான உதவியை, தற்காலிகமாக இடைநிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் !

Tuesday, September 19th, 2023

உலக உணவுத் திட்டத்தின் கீழ் சோமாலியாவுக்கான உதவியை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

கடுமையான பஞ்சத்தை தவிர்க்கும் வகையில் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உதவிகளை, சோமாலிய அதிகாரிகள் மோசடி செய்துள்ளமை ஐக்கிய நாடுகளின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சோமாலியாவுக்கான உதவியினை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: