அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வலி கிழக்கில் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, January 25th, 2022

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு நிரவாகப் பொறுப்பாளர் இராமநாதன் ஐங்கரனால் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகளுக்கும் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.மதியழகன் சுபாசினி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.  கிருஷ்னாளினி ,  தலைமையக சமுர்த்தி முகாமையாளர் செல்வி. நகுலராணி  மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து வழங்கி வைத்திருதமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பி...
புதிதாக அமைக்கப்பட்ட சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!