முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Thursday, May 24th, 2018

முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படும் என்பதை அறிவிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடமே குறித்த கேள்வியை செயலாளர் நாயகம் எழுப்பியிருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி மாவட்டத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள், கடந்த கால யுத்தம் காரணமாக 2000ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, இதுவரையில் மேற்படி பகுதிகளில் மீளக்குடியேற்றப்படாத நிலையில், வாடகை வீடுகளிலும், பிற பகுதிகளில் உறவினர்களது தயவுகளிலும் பாரிய பாதிப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தொடர்ந்து மோதல்களை மேற்கொண்டிருந்த மேற்படி பகுதிகள் அதிகளவு ஆபத்தான வெடி பொருட்கள் புதைந்துள்ள பகுதிகளாகவும் காணப்படுகின்றன.

அந்த வகையில் இப்பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றுவது மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும் என்று வெடி பொருட்களை அகற்றுகின்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் குறிப்பிடப்பிடப்படுகின்றது.

எனினும், மேற்படி சுமார் 300 குடும்பங்களின் நிலைiமையினை அவதானிக்கின்றபோது, அக் குடும்பங்களது மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது.

மேற்படி பகுதிகளில் வெடி பொருட்களை அகற்றி, மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி சுமார் 300 குடும்பங்களும் எப்போது மீளக்குடியேற்றப்படும் என்பதை அறிவிக்க முடியுமா? என்பதுடன் குறித்த பகுதிகளில் வெடி பொருட்களை விரைந்து அகற்றும் நோக்கில் மேலதிக நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ள முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம...
தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ள...
தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...

தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களைப் போல ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் மாணவரது கல்வியிலும் அரசு ...
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...