27 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கிற்கு நேரடி விமானம் !
Friday, October 20th, 2017
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.
தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது. இதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
Related posts:
ரூ.32 ஆயிரம் கோடியில் 2 புதிய அணு உலைகளை உருவாக்கும் சீனா!
கிழக்கு சீனாவை புரட்டிப்போட்ட மெகி சூறாவளி!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சின் மனைவி காலமானார்!
|
|