சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி!

Saturday, February 24th, 2018

சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை மகிழுந்து குண்டுத் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு குண்டுத் தாக்குதலும், தேசிய புலனாய்வு பணியகத்துக்கு அருகில் மற்றுமொரு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட பாரஊர்தி குண்டுத் தாக்குதலில் 500 பேர்வரை கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: