27 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கிற்கு நேரடி விமானம் !

சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.
தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது. இதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
Related posts:
சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி!
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரானியர்கள் பலி!
திடீரென தீப் பற்றி எரிந்த 26 மாடிக் கட்டடம் முற்றாக நாசம்!
|
|