11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு!
Monday, June 3rd, 2024
கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டொங் யூனை சந்தித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி லா பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சீனாவினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தலையீடுகள் குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ரஸ்யாவிற்கு வழங்கப்பட்டு வரும் பொருளாதார உதவிகள் மற்றும் தாய்வானுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்படும் இராணுவ பயிற்சிகள் போன்றன குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் இந்திய த...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 21 பேர் உயிரிழப்பு!
2025 க்குள் நாட்டில் அனைவருக்கும் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை - நீர் வழங்கல் அமைச்சு தெரிவிப்ப...
|
|
|


