பாடசாலையாக கருதப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து சுமார் 500 பேர் மீட்பு!

Saturday, September 28th, 2019


நைஜீரியாவின் கடுனா முயனரயெ நகரில் இஸ்லாமிய பாடசாலையாக கருதப்பட்ட முகாம் ஒன்றிலிருந்து சுமார் 500 பேர் மீட்கப்பட்டதாக நைஜீரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் உட்பட ஆண்கள் அந்த முகாமில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததுடன், 5 வயது சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிலர் இரண்டு கால்களுக்கும் விலங்கிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர்கள் ஆசிரியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இஸ்லாமிய பாடசாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: